9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்... பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன..!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. 6ந் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 77 புள்ளி 43 சதவீத வாக்குகளும், நேற்று முன்தினம் நடைபெற்ற 2ம் கட்டத் தேர்தலில் 78 புள்ளி 47 சதவீத வாக்குகளும் பதிவாகின.
வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டிகள் 74 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Comments